பெங்களூரு சிறையில் இருந்து நடிகர் தர்ஷன் பல்லாரி சிறைக்கு மாற்றப்படுவாரா?

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுதலையானார். அவரது ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பல்லாரி மாவட்ட சிறைக்கு நடிகர் தர்ஷனை மாற்றக் கோரி சிறை நிர்வாகம் சார்பில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here