பட்டர்வொர்த்:
கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சிலாங்கூர், போர்ட் கிள்ளானில் 3.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான துரித நூடுல்ஸ் பொட்டலங்கள் ஏற்றப்பட்ட கொள்கலனில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற நடவடிக்கையை பினாங்கு சுங்கைத்துறையினர் முறியடித்துள்ளது.
சுங்கத்துறையினர் “கன்டெய்னரை ஆய்வு செய்ததில், “உடனடி நூடுல்ஸ்” எனக் குறிக்கப்பட்ட 1,832 பெட்டிகளில் குறித்த சிகரெட்டுக்கள் மறைத்து வைத்து கடத்தப்பட்டது ,” என்று பினாங்கு சுங்கத்துறை இயக்குநர் ஹமிசன் கலிப் கூறினார்.
இது தொடர்பான விசாரணைக்கு உதவும்பொருட்டு போர்ட் கிள்ளானிலுள்ள ஒரு ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 47 வயது இயக்குனர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ஹமிசான் கூறினார்.