சமிஞ்சை விளக்கில் நிற்காமல் வந்த வேன் ஓட்டுநர் சுகனேஷ்வரன் சாலை விபத்தில் பலி

ஜெம்போல் சிமெண்ட் ஏற்றிச் சென்ற  மீது வாகனம் மோதியதில், சிமிஞ்சை விளக்கில் நிற்காமல் வந்த  27 வயது வேன் ஓட்டுநர் மரணமடைந்தார். KM15 ஜாலான் கோல பிலா-சிம்பாங் பெர்டாங்கில் அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் எஸ். சுகனேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜெம்போல் காவல்துறைத் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார். லோ

ரியில் இருந்து நாங்கள் பெற்ற டேஷ்கேம் பதிவு டி-ஜங்ஷனில் டிரைவர் நிறுத்தப்பட்டதைக் காட்டியது. சமிஞ்சை விளக்கு பச்சை நிறமாக மாறியதும் அவர் வாகனத்தை இயக்கினார் என்று அவர் கூறினார். அப்போது வலதுபுறம் வந்த வேன் ஓட்டுநர் லோரி மீது மோதினார். விபத்தின் போது வானிலை மற்றும் சாலை நிலைமைகள் சீராக இருந்தன.

இரண்டு வாகனங்களையும் புஸ்பகம் பகுதிக்கு ஆய்வுக்கு அனுப்புவோம் என்று கூறிய அவர், 42 வயதான லோரி ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார். இறந்தவரின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக த அனுப்பப்படும் என்று  ஹூ கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here