சர்ச்சசைக்குரிய சமயப் போதகரான டாக்டர் ஜாக்கிர் நைக்கிற்கு தம்முடைய அறிக்கைகள் வழி களங்கம் விளைவித்ததற்காக அவருக்குப் பேராசிரியர் இராமசாமி 15 லட்சத்து20 ஆயிரம் ரிங்கிட்டை (1.52 மில்லியன் ரிங்கிட்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்தியர்களுக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் இராமசாமியால் இந்த தொகை யை செலுத்துவது மிகவும் கடினமானதும் நெருக்கடியா னதும் ஆகும் என்பதை உணர்ந்த மலேசியத் தமிழர் குரல் இயக்கம் அவருக்கு உதவ முன்வந்துள்ளது.
இந்த இக்கட்டான நிலைல் இருக்கும் பேராசிரியர் இராமசாமிக்கு இந்தியர்கள் நிச்சயம் உதவ முன்வருவார்கள் என எண்ணி அவருக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த திட்டத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் இத்தொகையை வரும் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தும் வசதியை பேராசிரியர் கொண்டிருக்கவில்லை என்றும் இந்திய சமுதாய மக்கள் தமக்குக் கரம் கொடுக்க வேண்டும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அவ்வகையில் இப்பத்துவரை சுமார் 4 லட்சத்து 50000 வெள்ளியை மக்கள் செலுத்தியுள்ளனர் என்றும் மேலும் குறிப்பிட்ட இந்த தவணைக்குள் நமது இந்தியர்கள் நிச்சயம் பேராசிரியர் இராமசாமிக்கு உதவ முன்வருவார்கள் எனவும் டேவிட் மார்ஷல் குறிப்பிட்டார்.