வாஷிங்டன்:
குழந்தையின் தோல் உரிந்து வரும் நிலைக்கு ஒரு தந்தை காரணமாகியுள்ள சம்பவம் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் நடந்துள்ளது.
குழந்தையின் உடலின் 40% கடுமையாகக் காயமடைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
குழந்தையைக் குளிப்பாட்டும்போது அது அழுதுகொண்டே இருந்ததாகவும் அது வழக்கமான ஒன்றாகத் தான் கருதியதாகவும் நான்கு பிள்ளைகளுக்குத் தந்தை யான பெக் கூறியிருந்தார்.
இருப்பினும் குழந்தையைக் குளிப்பாட்டத் தொடங்கி நான்கு, ஐந்து நிமிடங்க ளுக்குப் பிறகுதான் தண்ணீர் மிகவும் சூடாக இருப்பதை பெக் உணர்ந்ததாகக் கைது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடும் குளிர்நீரில் முன்னதாகக் குழந்தையை இட்டதில் அதன் தோல் நீலநிறமாக மாறியது என்றும் குழந்தையை பெக் பலசாலி ஆக்க அவ்வாறு செய்தார் என்றும் கூறப்படுகிறது.