தனது 21வது வயதில் திருமணம் ஆகி உடனே விவாகரத்து ஆனதும் அது தன்னை மனதளவில் பாதித்து விரக்தியில் தற்கொலை செய்ய முடிவெடுத்தது குறித்தும் நடிகை ஸ்வர்ணமால்யா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியிருப்பதாவது, “21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. அவருக்கு 25 வயதுதான் அப்போது. அந்த வயதில் சரி, தவறு எது என எங்களுக்குத் தெரியவில்லை. விவாகரத்தான பிறகு என்னைவிட என் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் கஷ்டப்படக்கூடாது என்று என்னை அவர்கள் படிக்க சொன்னார்கள். அந்த சமயத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.
இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? எதற்கு இப்படி வாழ்கிறோம் என்று தோன்றியது. அதன் பிறகு என் தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். மன அழுத்தத்திற்காக இரண்டு மாதம் மருந்து எடுத்துக்கொண்டேன். இப்போது நன்றாக இருக்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்