இஸ்ரேல் காசா இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தின் இரண்டாம் நாளில், பரஸ்பரம் மேலும் பல சிறைக்கைதி – பிணைக்கைதி விடுவிப்புகள் அரங்கேறுகின்றன.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், தங்கள் வசமிருக்கும் பிணைக் கைதிகளை விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் ஆயுதக் குழு தெரிவித்தது. இதனையடுத்து, போர் நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று, இஸ்ரேல் தரப்பில் கல்வீச்சு போன்ற சிறு குற்றங்களில் ஈடுபட்ட 15 சிறுவா்கள் மற்றும் 24 பெண்கள் என 39 பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.





















