SUV கார் எக்ஸ்காவேட்டரில் மோதியதில் மாணவர் மரணம்- குடும்ப உறுப்பினர்கள் நால்வர் காயம்

மூக்கா:

ஜாலான் மூக்கா-சிலாங்காவ்வின் 65ஆவது கிலோமீட்டரில், நேற்று ஒரு குடும்பத்தினர் பயணித்த SUV ரக கார் சாலையோரத்தில் வேலை செய்து கொண்டிருந்த எக்ஸ்காவேட்டரில் மோதியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய எல்வின் ஃபிரடெரிக் ரிச்செல் பயா, என்ற மாணவர் சிம்பாங் புகுட் சுகாதார கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மூக்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் முஹமட் ரிசல் அலியாஸ் தெரிவித்தார்.

SUV கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் சறுக்கி சாலையோரத்திலிருந்து இருந்த எக்ஸ்காவேட்டர் இயந்திரத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

“விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் இறந்தார், அதே நேரத்தில் அவரது இளைய சகோதரர்களில் ஒருவர் காலில் பலத்த காயம் அடைந்தார். மேலும் அவரின் ​​தாயும் மற்றொரு ஐந்து வயது சகோதரியும் லேசான காயம் அடைந்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எக்ஸ்காவேட்டர் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மூக்கா மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here