சுங்கை பாக்காப் சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் ஜொஹாரி அரிஃபின் போட்டி

நிபோங் தெபால்:

சுங்கை பகாப் மாநிலத் தொகுதிக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக
முன்னாள் ஆசிரியர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

60 வயதான ஜூஹாரி, நேற்று புதன்கிழமை (ஜூன் 12) சிம்பாங் எம்பாட்டில் வைத்து பிகேஆர் துணைத் தலைவரும் கட்சியின் தேர்தல் இயக்குநருமான ரஃபிசி ரம்லியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜூஹாரி யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியாவில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் இன்ஸ்டிட்யூட் அமினுதீன் பாக்கியின் (வடக்கு கிளை) இயக்குநராக உள்ளார்.

இவர் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக், நிபோங் டெபல் எம்.பி., பாராளுமன்ற மற்றும் கட்சி விவகாரங்களைக் கையாள்வதில் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

மே 24 அன்று சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினரும் நிபோங் தெபால் பாஸ் தலைவருமான நூர் ஜம்ரி லத்தீஃப் இறந்ததை அடுத்து சுங்கை பாக்காப் தொகுதி காலியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here