ஜோகூர் பாருவில் பல இடங்களில் திடீர் வெள்ளம்

ஜோகூர்:
நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் ஜோகூர் பாருவில் பல பகுதிகளில் இன்று அதிகாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஜோகூர் பாருவில் உள்ள கம்போங் நுசா டாமாய் மற்றும் ஜாலான் மாசாய் லாமா, பாசீர் கூடாங் மற்றும் கம்போங் பாயா கெனங்கான் ஆகிய இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று குடிமைத் தற்காப்புப் படை (APM) தனது ஃபேஸ்புக்கில் (FB) வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், ஜோகூர் பாரு APM-க்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அதனைத் தொடர்ந்து தமது குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது என்றும் கூறினார்.
“தற்போதைக்கு உயிர்சேதம் அல்லது சொத்து இழப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை, அவ்வப்போது கண்காணிப்பு APM தொடர்கிறது,” என்று அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here