ரந்தாவ் பஞ்சாங்:
கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி 15 மாத குழந்தை ஒன்று இன்று உயிரிழந்தது.
பாதிக்கப்பட்ட ஃபிர்தௌஸ் முகமட் பைசலின் உடல் தாமான் ரந்தாவ் பாருவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த குழந்தை இன்று நண்பகலில் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மதியம் 2.20 மணியளவில் சிறுவனின் உடல் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 19 முதல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக பதிவாகியுள்ளது .