பினாங்கு கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு

 ஜார்ஜ் டவுன், பயான் பாருவில் உள்ள குயின்ஸ்பே மால் அருகே கடற்கரையில் பிறந்த பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) மாலை 5.55 மணியளவில் குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தென்மேற்கு பினாங்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ட் கமருல் ரிசல் ஜெனால் தெரிவித்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு  கமருல் கேட்டுக் கொண்டார்.

இறந்த உடலை ரகசியமாக அப்புறப்படுத்தியதன் மூலம் பிறப்பை மறைத்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 318இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here