கோத்தா கினாபாலு:
சமீபத்தில் இனனாம் கிளினிக்கிற்கு வெளியே ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பார்த்து, அநாகரிகமான நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவருக்கு ஐந்து மாத சிறை மற்றும் RM4,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
லோரி ஓட்டுநராக பணிபுரிந்த ரசிப் அஸ்தாலி, 34, என்ற குற்றம்சாட்டப்பட்டவர், கடந்த ஆகஸ்டு 13 அன்று காலை 10.40 மணிக்கு அக்குற்றத்தை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி லவ்லி நடாஷா சார்லஸ், குறித்த நபருக்கு சிறைத்தண்டனையை அனுபவிக்கவும், அபராதம் செலுத்தவும், தவறினால் மேலும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டார்.