சென்னை:
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. கடுமை யான மழையின் காரணமாக நகரத்தில் தண்ணீரும் தேங்கியது. தி.நகர் சுரங்கப் பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வடபழனி முருகன் கோயில் குளம்,அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னை முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது.
மிக்ஜாம் புயலானது ஒருவழியாக ஆந்திராவில் கரையை கடந்தது. இருந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்பு கடுமையாகவே இருந்தது. மழை விட்ட ஒரு நாளில் சென் னையின் முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்தது. இருந்தாலும் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் தீவிரமாக மீட்பு பணி களில் இறங்கினர். வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் பல உதவிகளை செய்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் நீர் வடிந்துவிட்டதால் சென்னை மக்கள் படிப் படியாக தங்களது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய திரையுலகிலிருந்தும் உதவிக் கரங்கள் நீண்டுள்ளன. அந்தவகையில் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், கலக்கப் போவது யாரு பாலா உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். விஜய் மக்கள் இயக்கத் தினரும் களத்தில் இறங்கி மும்முரமாக நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நிதியுதவி அளித்திருக்கிறார். அதன்படி மிக்ஜாமால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அளித்தார். சிவாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.