4ஆம் நிலை நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வரும் சுங்கை பெசார் அம்னோ தலைவர்

கோலாலம்பூர்: சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் தற்போது 4ஆம் நிலை நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ளார். ஜமால் மருந்து உட்கொண்ட போதிலும், கடந்த இரண்டு வருடங்களாக அவர் போராடி வந்த நோய் மீண்டும் தலையெடுத்து விட்டதாக அவரது மகன் அமீன் டேனியல் ஜமால் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக என் தந்தை ஒரு தனியார் சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியை நாடினார். அவர் அனைத்துலக அளவில் பெறப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் திரும்பியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது ஜமால் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், உடல் நலக்குறைவு காரணமாக கணிசமான அளவு உடல் எடை குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அம்னோ விருந்தின் போது எதிர்பாராதவிதமாக விழுந்த ஜமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உணவில் விஷம் கலந்திருக்கலாம் என கருதப்பட்டது. அமீனின் கூற்றுப்படி, அவரது தந்தை தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைய பொதுமக்கள், அவரது நண்பர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களிடம்  தங்கள் பிரார்த்தனைகளிலும் சிந்தனைகளிலும் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார்  அமீன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here