ஜோகூர் பாரு: பாங்குனான் சுல்தான் இஸ்கந்தரில் உள்ள சுங்க, குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட (CIQ) வளாக முகப்பிடங்கள் கட்டம் கட்டமாக மூடப்பட்டு மேம்படுத்தும் பணியை ஒத்திவைக்க மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி களம் இறங்கியுள்ளார். முன்னதாக, மேம்படுத்தும் பணிகளுக்காக பல முகப்பிடங்கள் மற்றும் தானியங்கி முகப்பிடங்கள் கட்டம் கட்டங்களாக மூடப்படும் என்று என்எஸ்டி தெரிவித்திருந்தது.
பள்ளி விடுமுறை நேரத்தில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றால், நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மந்திரி பெசார் தலையிட்டு, மேம்படுத்தும் பணிகளை ஒத்திவைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். அவர் தனது முகநூல் பக்கத்தில், பள்ளி விடுமுறை முடியும் வரை இந்தப் பணிகளை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்று ஒரு பதிவை வெளியிட்டார்.