பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூர் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் குழுக்கள் இணைந்து, ஐடமான் அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி சமீபத்தில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இரண்டு சிறுவர்கள் ஜெய்ன் ரய்யானைப் பார்த்ததாக சாட்சியமளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
ஆட்டிஸம் நோய் குறைபாடு கொண்ட குழந்தையான ஜெய்ன் ரய்யான் அப்துல் மயிட்டின் (6) மரணம் தொடர்பான வழக்குக்கு உதவும் வகையில், இன்று காலை தொடங்கிய மறுஆய்வு பிற்பகல் 3.30 மணிக்கு முடிவடந்தது என்றும், பாதிக்கப்பட்டவரின் நண்பர்களான முறையே ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்களின் சாட்சியத்தின் அடிப்படையில், அவ்வடுக்குமாடிக் குடியிருப்பின் பிளாக் R இன் படிகளில் பாதிக்கப்பட்டவர் ஜெய்ன் ராய்யானைக் கண்டதாக கூறினர் என்று, சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தாரி.
மேலுமி இதுவரை காவல்துறை 86 அறிக்கைகளை எடுத்துள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் அறிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.