கோலாலம்பூர்:
கடந்த வாரம் போலீஸ்காரர் ஒருவரை பாலியல் உறவுக்கு தூண்டிய தாய்லாந்து பெண் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM1,500 அபராதம் விதித்தது.
மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசன் முன்னிலையி, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மிஸ் நிபாபோர்ன் ஃபராபோங், 24, என்பவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் இங்குள்ள ஜாலான் இம்பியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், குறித்த பாலியல் சேவைக்காக 100 ரிங்கிட் கட்டணம் அவர் அறவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 372b பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டது, இது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.