பெட்டாலிங் ஜெயா:
கோலாலம்பூரின் மோசடி அழைப்பு மையங்களுடன் தொடர்புடைய 1,066 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த அழைப்பு மையங்கள் தொடர்பில் 87 விசாரணை அறிக்கைகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை காவல்துறையினரால் திறக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் உறுதிப்படுத்தினார்.
“KL வணிக குற்றப் புலனாய்வுத் துறை ஜனவரி முதல் 1,609 சைபர் கிரைம் சோதனைகளையும் 1,222 மற்ற சோதனைகளையும் நடத்தியது.
“மோசடிகள் மற்றும் அச்சுறுத்தல்களை நாங்கள் அறிந்திருக்கிறோம், அதைக் கட்டுப்படுத்தவே நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்,” என்று அவர் இன்று (டிசம்பர் 20) KL போலீஸ் தலைமையகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.