கோத்தா பாரு:
இன்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி, கிளந்தானில் மொத்தம் 5,155 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரந்தாவ் பஞ்சாங்கிற்கு அருகே உள்ள கோலோக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றின் அருகே உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சமூக நலத் துறையின் (JKM) வெள்ளப் பேரிடர் தகவல் போர்டலின் அடிப்படையில், 1,628 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் இப்போது பாசீர் மாஸ், தானா மேரா, ஜெலி, குவா மூசாங் மற்றும் கோலக் கிராய் உள்ளிட்ட இடங்களில் இயங்கிவரும் 38 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.