வெள்ளம்: கிளந்தான், திரெங்கானு ஆகிய இடங்களிலுள்ள IRB கிளை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது

புத்ராஜெயா:

பாசீர் மாஸ், கிளந்தான் மற்றும் உலு திரெங்கானு, திரெங்கானு ஆகிய இடங்களை சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியிலுள்ள உள்நாட்டு வருமான வாரியத்தின் (IRB) கிளை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாசீர் மாஸில் உள்ள IRBயின் கிளை அலுவலகம் இன்று முதல் டிசம்பர் 31 வரை மூடப்படும், அதன் செயல்பாடுகள் ஜனவரி 1, 2024 அன்று மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உலு திரெங்கானு அலுவலகத்தின் செயற்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here