PADU தரவுத்தளத்திற்கு சிலாங்கூர் மக்களிடமிருந்து அதிக வரவேற்பு; இதுவரை 117,000 பேர் பதிவு

கோலாலம்பூர்:

டந்த செவ்வாயன்று தொடங்கப்பட்ட நாட்டின் முதன்மை தரவுத்தள அமைப்பு (PADU), சிலாங்கூர் மக்களிடமிருந்து அதிக ஊக்கமளிக்கும் பதிலைப் பெற்றுள்ளது, இதுவரை சுமார் 117,000 பேர் அதில் பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் பதிவுக்கு கூடுதலாக, இந்த புதிய முறையின் கீழ் பதிவு செய்ய அதிகமானவர்களை ஊக்குவிக்கும் வகையில் தாம் பல PADU கவுன்டர்களையும் திறந்துள்ளதாக மாநில புள்ளியியல் துறை இயக்குனர் ஹர்தினி யாக்கோப் கூறினார்.

பதிவு செயல்முறையை எளிதாக்குவது மற்றும் தளத்தை அணுகுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு அல்லது பதிவு செயல்பாட்டின் போது சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டு PADU கவுன்டர்களை அமைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 396,181 பேர் பாடு தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here