போதைப்பொருள் கடத்தல் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட 22 பேர் கைது

சிரம்பான், ஜனவரி 1 முதல் போர்ட்டிக்சன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்திய பின்னர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பழக்கத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட 22 நபர்களை போலீசார் கைது செய்தனர். 21 முதல் 54 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என போர்ட்டிக்சன் காவல்துறை தலைவர் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார். சோதனையின் போது, 155.69 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் ஷாபு உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் ரிங்கிட் 7,508 மதிப்புள்ள பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

ஒரு நிசான் சென்ட்ரா கார் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன. லிங்கி, பாசீ பாஞ்சாங், தெலோக் கெமாங் மற்றும் போர்ட்டிக்சன் ஆகிய இடங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயல்படுவதாக நம்பப்படுகிறது என்று அவர் இன்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here