நெகிரி செம்பிலானில் சட்டவிரோத குடியேறிகள் 80 பேர் கைது- குடிநுழைவுத் துறை

சிரம்பான்:

டந்த ஜனவரி 2 முதல் 4 வரை நெகிரி செம்பிலான் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் மொத்தம் 80 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

சிரம்பான், நீலாய் மற்றும் போர்ட்டிக்சன் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள 19 வளாகங்களில் நடந்த சோதனையில் 15 வங்களாதேச ஆண்கள், 31 இந்தோனேசிய ஆண்கள் மற்றும் 19 இந்தோனேசிய பெண்கள், ஒரு இலங்கைப் பெண், இரண்டு இந்திய ஆண்கள், 9 மியன்மார் ஆண்கள் மற்றும் ஒரு மியன்மார் பெண், இரண்டு தாய்லாந்து ஆண்கள் என மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டு, லெங்கெங் குடிநுழைவு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக அதன் இயக்குனர் கென்னித் டான் ஐ கியாங் கூறினார்.

“இந்த நடவடிக்கையில் 17 அதிகாரிகள் ஈடுபட்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 161 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்,” என்று அவர்நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 80 பேரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 இன் விதிமுறை 39(b) இன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here