குழியைத் தவிர்க்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் குப்பை லோரி ஓட்டுநர் உயிரிழப்பு

கினாபடங்கான்:

ம்போங் செந்தோசா ஜெயா, ஜாலான் சண்டாக்கான்-லஹாட் டத்து சாலையில், குழியைத் தவிர்க்க முயன்றபோது குப்பை லோரி கட்டுப்பாட்டை இழந்ததால் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், முகமட் இஸ்வான் மம்பாசங் (39) என்பவர் லோரியில் சிக்கியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கினாபடங்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் துல்பஹாரின் இஸ்மாயில் கூறினார்.

ஆரம்ப விசாரணையின் விளைவாக, லஹாட் டத்து திசையிலிருந்து சண்டாக்கான் நோக்கி லோரியை பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​குண்டும், குழியுமான சாலையை தவிர்க்க முயன்றதால் லோரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக கினாபடங்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 41(1)ன்படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here