கோலாலம்பூர்:
நாளை முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை பகாங் மற்றும் ஜோகூரின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு ஜோகூரில் மீண்டும் வெள்ளம் ஏற்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பகாங்கில் உள்ள குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய இடங்களிலும், ஜோகூரின் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை நிலை தொடர் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவை தவிர, இன்றும் நாளையும் சபாவிலும் இதே வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது, சண்டாக்கான் (தெலுபிட், கினாபடங்கான், பெலூரான் மற்றும் சண்டக்கான்) மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளில் இந்த வானிலை நிலவும் என்றும், சரவாக்கில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெடோங், சரிகேய், சிபு மற்றும் மூக்கா ஆகிய இடங்களிலும் தொடர் மழை பெய்யும் என அது தெரிவித்துள்ளது.
வேலை பற்றிய மேலதிக தகவல் தேவைப்படுவோர் myCuaca மொபைல் பயன்பாடு அல்லது MetMalaysia இன் அதிகாரப்பூர்வ போர்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் சமீபத்திய வானிலை தகவலைப் பெறலாம் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.