வெள்ளம் காரணமாக இதுவரை 2,095 விவசாயிகள் பாதிப்பு

குவாந்தான்:

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நாடு முழுவதும் மொத்தம் 2,095 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,701 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகாங்கில் 72 காய்கறி மற்றும் தோட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெக்கான், குவாந்தன் மற்றும் ரொம்பின் போன்ற மாவட்டங்களில் 58.8 ஹெக்டேர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது என்று துணை வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குரூப் கூறினார்.

“வானிலை இன்னமும் நிச்சயமற்றதாக இருப்பதால் நாங்கள் இன்னும் தரவைச் சேகரித்து மற்றும் புதுப்பித்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அந்தந்த மாவட்ட வேளாண்மைத் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம், விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட தகுதியானவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here