கோலாலம்பூர்:
11 மாத குழந்தையின் கன்னத்தில் அறைந்து, நெற்றியில் அடித்து காயங்கள் மற்றும் கீறல்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று RM10,000 அபராதம் விதித்தது.
குறித்த அபராதத்தை செலுத்த தவறினால் அவர் 18 மாத சிறையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை குறித்த பராமரிப்பாளர் ஒப்புக்கொண்டதையடுத்து, 42 வயதான நோர்லிசா ஒஸ்மானுக்கு நீதிபதி சித்தி அமினா கசாலி அபராதம் விதித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 3 ஆண்டுகளுக்கு நன் நடத்தையில் வைக்க வேண்டும் என்றும், இன்று முதல் 6 மாதங்களில் 120 மணிநேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.