சனிக்கிழமை (ஜன. 27) பிற்பகல் 2.11 மணியளவில் சபாவின் கிழக்கு கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலநடுக்கத்தின் மையம் வடக்கே 6.2 டிகிரியிலும், கிழக்கே 118.4 டிகிரியிலும் 10 கிலோமீட்டர் ஆழத்தில், சபாவின் வடகிழக்கில் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.