சிப்பாங்:
சரவாக்கின் மிரிக்கு 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 36.53 கிலோகிராம் சியாபு போதைப்பொருளை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களின் கணவன் மற்றும் மனைவி ஆகியோரும் அடங்குவர்.
24 முதல் 34 வயதுக்குட்பட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் ஜனவரி 24 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இங்குள்ள காண்டோமினியத்தின் பார்க்கிங் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீரிக்கு செல்வதற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.
அவர்களது உடமைகளை ஆய்வு செய்ததில், மெத்தம்பேட்டமைன் அல்லது சியாபு என சந்தேகிக்கப்படும் 38 பதப்படுத்தப்பட்ட போதை மருந்துப் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் ஆம்பெடமைன்கள் மற்றும் மெத்தம்பேட்டமைன்கள் பாவித்து இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.