ஈப்போ: தாபாவில் உள்ள ஜாலான் பிடோர் லாமா என்ற இடத்தில், கார் தீப்பிடித்ததில் மூத்த குடிமகன் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட மூவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த அதிகாரி முகமட் சுபியான் யாகூப் கூறுகையில், வியாழன் (பிப்ரவரி 8) அதிகாலை 4.49 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. கார் 98% தீயில் மூழ்கியது மற்றும் இறந்தவர் பின் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
தீக்காயங்களுக்கு ஆளான மூன்று பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலை 5.11 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் நடவடிக்கை 6.30 மணிக்கு முடிந்தது என்று அவர் கூறினார்.