ஈப்போ:
அதிகமான பயணிகளை கையாளும் பொருட்டு, சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தினை மேம்படுத்துவதற்கு RM8 மில்லியன் நிதி ஒடுக்கப்பட்டுள்ள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
குடிநுழைவு மற்றும் செக்-இன் கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட பலவிதமான மேம்பாட்டு பணிகளும் இதில் அடங்கும் என்று இன்று (பிப்ரவரி 8) மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடனான சந்திப்பைத் தொடர்ந்து, அவர் கூறினார்.
“அது இந்த ஆண்டு செய்யப்படும், உண்மையில் இதற்காக ஒரு டெண்டர் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது விமான நிலையத்தை நீடிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என அவர் கூறினார்.
புதிய இடங்களுக்கு விமானங்கள் சேர்க்கப்படுமா என்று கேட்டபோது, தாங்கள் இன்னும் அதில் வேலை செய்து வருவதாக லோக் கூறினார்.