தெலுக் இந்தான்:
முதலாம் படிவ மாணவி ஒருவரை உடல்ரீதியாக மானபங்கப்படுத்தி, ஆபாசமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில், பள்ளியின் முன்னாள் காவலாளி ஒருவருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாடடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட முகமட் ரிட்ஸ்வான் மஹ்மூட் @ மஹமூட் , 46, எதிரான குற்றச்சாட்டு நீதிபதி ஹக்கீம் இன்டான் நூருல் ஃபரீனா ஜைனல் அபிதின் முன் வாசிக்கப்பட்டவுடன், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
குற்றச்சாட்டின்படி, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி காலை 6.45 மணியளவில் ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் வகுப்பின் முன் பாதிக்கப்பட்ட 7 வயது மாணவியின் உடலை பாலியல் நோக்குடன் தொட்டதாகவும், அதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, அவர் மீது 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் சாட்டையடிக்கு உட்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் படி குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனையுடன், குற்றம் சாட்டப்பட்ட நபரை ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM8,000 மதிப்புள்ள பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது, மேலும் அவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்று தந்து இருப்பை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் வழக்கு மார்ச் 8 தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.









