தானா மேரா:
இங்குள்ள ஜாலான் தானா மேரா-ஜெலி சாலையில் சென்ற புரோத்தோன் பெர்சோனாவில் திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் பெருதும் சிரமப்பட்டனர், காரில் அதிக அளவு பெட்ரோல் இருந்ததால் அது நெருப்பு சுவாலைவிட்டு எரிந்ததாக நம்பப்படுகிறது.
இன்று காலை 11.36 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தீ பற்றிய தகவல் கிடைத்ததும், கெமாஹாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
குறித்த வாகனம் விபத்துக்குள்ளானதாகவும், அதனால் ஏற்பட்ட தீயில் 90 சதவீதம் எரிந்ததாகவும் கெமாஹாங் தீயணைப்பு நிலையத் தலைவர் திசாகர் மணி முஸ்தபா கூறினார்.