சீனப் புத்தாண்டிற்கு பிரதமரின் பரிசு என்னை நெகிழ வைத்தது: கே கே சாய்

சீனப்புத்தாண்டில் பிரதமர் தம்பதியரின் பரிசு என்னை நெகிழ வைத்தது என்று கே.கே. மார்ட் 2024ஆம் ஆண்டு சீனப்புத்தாண்டு விருந்து உபசரிப்பின் போது உரிமையாளர் டத்தோஶ்ரீ கே.கே சாய் தமதுரையில் தெரிவித்தார். தனது 56 ஆவது வயதில் பிரதமரின் பரிசினை நான் ஓர் அங்கீகாரமாக கருதுகிறேன் என்றார்.

 

இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம். நான் கே கே மார்ட்டை 5 கிளைகளுடன் தொடங்கினேன். தற்பொழுது 812 கிளைகள் இயங்குகின்றன. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக தோள் கொடுத்த அனைத்து நல்லுளங்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்விருந்தில் கலந்து கொண்டிருக்கும் பலர் என்னுடன் நீண்ட காலமாக பயணிக்கின்றனர். வர்த்தக்கத்தை கடந்து நண்பர்களாக என்னுடன் பயணிப்பவர்கள் அதிகம் என்றார் அவர்.

இவ்விருந்து நிகழ்வில் சீன பராம்பரிய இசை நிகழ்ச்சி, விளையாட்டு அங்கம், கே கே  மார்ட்  ஊழியர்களின் பாடல், போட்டி விளையாட்டுகள், வாணவெடி உள்ளிட்ட பல கண்கவர் அங்கங்கள் இடம்பெற்றிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here