பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்

குவந்தான்:

பெண்கள் முதலில் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் அவர்களால் தங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ள முடியும் என்று பகாங் சுல்தானா, துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தெரிவித்தார்.

குடும்பத்தின் பல்வேறு அம்சங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் பெண்கள் வீட்டுன் தூண்கள் என்று துங்கு அசிசா கூறினார்.

“பகாங் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், குறைந்த சர்க்கரை உட்கொள்ள வேண்டும், காய்கறிகளை சாப்பிட வேண்டும், ஏனெனில் ஆரோக்கியம் மிக முக்கியமான விஷயம். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்கள் வீட்டை எப்படிக் கவனிப்பது…,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் 16வது பேரர்சியாராக பதவி வகித்து, தனது பொறுப்புகளை முடித்துக்கொண்டு தெங்கு அம்புவான் பகாங்கிற்கு திரும்பியதை ஒட்டி நடந்த இரு இரவு விருந்தில் துங்கு அசிசா இவ்வாறு கூறினார்.

சுகாதார அம்சத்துடன் கூடுதலாக, பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று நினைவூட்டினார், ஏனெனில் அது அவர்களின் வாழ்க்கையை மாற்றும் மற்றும் வறுமையை ஒழிக்கும் என்றார்.

பகாங்கில் உள்ள 38 பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதியாக 576 பெண்கள் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here