ஷா ஆலமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 10 பேர் ஷா ஆலம் மருத்துவமனையிலும், ஐந்து பேர் கிள்ளாங்கில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையிலும், மீதமுள்ள மூன்று பேர் சுங்கை பூலோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் நிலையாக உள்ளனர். பதினான்கு பேர் லேசான அறிகுறிகளை அனுபவித்து வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர் என்று அவர் சனிக்கிழமை (பிப். 17) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் உலக புற்றுநோய் தினம் 2024 ஐத் தொடங்கி வைத்தார்.
எவ்வாறாயினும், இரண்டு கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நான்கு பாதிக்கப்பட்டவர்கள் ஷா ஆலம் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மற்ற இருவரும் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (பிப். 16) புக்கிட் ராஜா தொழிற்பேட்டை பிரிவு 7, ஷா ஆலமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், 10 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.