காஸாவில் போர் நிறுத்தம்; வாக்கெடுப்பு நடத்த ஐ.நா முடிவு

காஸா:

இஸ்ரேல்- ஹமாஸ் போரை உடனடியாக மனிதநேய அடிப்படையில் நிறுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், அல்ஜீரியா, போர் நிறுத்தத்திற்கான வரைவுத் தீர்மானம் ஒன்றை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாட்டுச் சபை பாதுகாப்பு மன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அதனையடுத்து வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீர்மானத்தை நிறைவேற்ற 15 நாடுகளின் ஆதரவு தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“இந்த வரைவு தீர்மானத்தின் மீதான நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. இந்த வரைவு வாக்கெடுப்புக்கு வந்தால், ஏற்றுக்கொள்ளப்படாது” என ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் தாமஸ்-கிரீன்ஃபீல்ட் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here