கூச்சிங்:
சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக திறக்கப்பட்ட அனைத்து தற்காலிக நிவாரண மையங்களும் இன்று மதியம் 1.30 மணியளவில் முழுமையாக மூடப்பட்டதாக,மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
“கூச்சிங் பிரிவில் தாமான் மாலிஹா பல்நோக்கு மண்டபம், ஸ்தாபோக் சமூக மண்டபம் மற்றும் கம்போங் சினார் புடி பாரு மண்டம் ஆகியவற்றில் இயங்கி வந்த மூன்று நிவாரண மையங்களும் அவற்றில் அடங்கும்” என்று அக்குழு தெரிவித்துள்ளது.









