ஜோகூர் பாரு:
சுல்தான் இஸ்கண்டர் கட்டிடத்தில் (BSI) உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்தில் நேற்று (பிப். 21) மதியம் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
நேற்று மாலை 4.15 மணிக்கு மின்சாரம் தடைபட்டதாகவும், அதிகாரிகளின் துரித நடவடிக்கைக்கு பிறகு, ஒரு மணி நேரத்திற்குப் பின், அதாவது மாலை 5.15 மணிக்கு, மின்சாரம் சீரமைக்கப்பட்டு, அனைத்து ஆய்வு மண்டலங்களும் வழக்கம் போல் இயங்கின என்று, BSI குடிநுழைவு அலுவலக தகவல் தொடர்பு மற்றும் கார்ப்பரேட் யூனிட் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் அரை நாள் நீடித்த மின்வெட்டுக்குப் பிறகு, CIQ BSI மின்வெட்டை சந்தித்தது இது இரண்டாவது முறையாகும்.