பங்கோர் தீவில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது; பேராக் மந்திரி பெசார்

ஈப்போ :

நீர் விநியோகத்தடை காரணமாக சுற்றுலா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட பங்கோர் தீவில், தற்போது நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் கூறினார்.

நீர் விநியோகத் தடைக்கான காரணங்களில் ஒன்றாக நம்பப்படும் ரிசார்ட் தீவில் உள்ள மூன்று முக்கிய டிரான்ஸ்-சீபீட் பைப்லைன்களில் ஒன்றில் ஏற்பட்ட கசிவை பேராக் நீர் வாரியம் (LAP) விரைவாக சீர் செய்தது என்று அவர் மேலும் கூறினார்.

“பங்கோர் தீவின் சுற்றுலாத் துறையானது, இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட திடீர் நீர் விநியோகத் தடங்கல்களிலிருந்து முழுமையாக மீண்டு வருவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் இனி நீர் தடை பற்றிய அச்சமின்றி தங்கள் விடுமுறையைக் கழிக்கலாம் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here