பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

லங்காவி: பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை (PIA) விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  அதற்கு RM1 பில்லியன் ஆகும் என்று அந்தோணி லோக் கூறுகிறார். கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கான பச்சை விளக்கு கிடைத்ததாக போக்குவரத்து அமைச்சர் கூறினார். மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) டெண்டர் செயல்முறை மற்றும் திட்டத்திற்கான நிதியுதவிக்கு பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

குவாங் மிங் டெய்லியின் படி, டெண்டர் முடிந்ததும் (திட்டத்தின்) உண்மையான புள்ளிவிவரங்கள் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்று  MAHB மற்றும் டூரிஸம் மலேசியா நடத்திய ரூட்ஸ் ஏசியாவை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பினாங்கில் PIA விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்துவதை மத்திய அரசு கவனிக்கும் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.

பினாங்கு உலகின் தலைசிறந்த இடமாக மாறியுள்ள நிலையில், பயான் லெபாஸில் இத்திட்டத்தை விரைவுபடுத்துவது அவசரத் தேவை என்று அவர் கூறினார். PIA இன் விரிவாக்கம் முனையத்தின் ஆண்டு கையாளும் திறனை 6.5 மில்லியன் பயணிகளில் இருந்து 12 மில்லியனாக அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here