சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,497 ஆக அதிகரிப்பு

கூச்சிங்:

ரவாக்கில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (மார்ச் 3) காலை 8 மணி நிலவரப்படி, 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,497 பேராக அதிகரித்துள்ளது, இது நேற்றிரவு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,193 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சரவாக் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூற்றுப்படி, அங்கு இயங்கிவரும் தற்காலிக நிவாரண மையங்களின் எண்ணிக்கையும் நேற்று 8 ஆக இருந்து இன்று 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சரவாக்கில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று மதியம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மாலையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here