மூவார்:
தத்தெடுத்த பிள்ளையை 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், ஆடவர் ஒருவருக்கு 69 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20 கசையடிகளும் விதித்து, செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
33 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் இவ்வழக்கில் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார், அவற்றில் நான்கு கற்பழிப்பு குற்றங்களும், ஒரு உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
நீதிபதி அபு பக்கர் மனாட் முன் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டவுடன், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார்.
பிரசவ நாளுக்காகக் காத்திருக்கும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவியும், அவரது தங்கையும் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது.