செராஸிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் பலி

கோலாலம்பூர்:

செராஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

நேற்று மதியம் 1:52 மணியளவில் குடியிருப்பின் அடியில் உள்ள புல்லில் மயங்கிய நிலையில் சிறுவன் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், இந்த சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சம்பவ இடத்திலிருந்த துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சிறுவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக ரிட்சுவான் கூறினார்.

மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீஸ் தொடரும் என்றும், வழக்கு தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் செராஸ் போலீஸ் நிலையத் தலைவர் இன்ஸ்பெக்டர் டோ சீ ஹவுரை 03-92050301 மாற்று எண் 302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here