கோடி ரூபாய் கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட மாட்டேன்: கங்கனா ரனாவத்

அண்மையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு நடனமாடினார்.

இந்நிகழ்ச்சியில் கங்கனா ரணாவத்தை நடனமாட அழைத்ததாகவும், அதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் கொடுப்பதாக கூறியும் நடனமாட அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அம்பானி இல்ல திருமண விழாவில் பிரபலங்கள் பங்கேற்று நடனமாடியதை குறிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், “நான் எவ்வளவோ பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளேன். ஆனாலும் பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். எத்தனையோ முறை எனக்கு ஆசைகாட்டப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளேன். பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு குணம் தேவை. பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கங்கனாவின் இந்த பதிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் கங்கனா இந்த மாதிரி சர்ச்சையாக பேசுவது ஒன்றும் புதிது இல்லை. இதற்கு முன்பும் கூட, ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் ஊரை கூட்டி பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் அவர்களது வீட்டுக்குள் வெவ்வேறு மாடியில்தான் வாழ்கிறார்கள். சேர்ந்து வாழ்வது போல் வெளியுலகுக்கு மட்டும் காண்பித்துக்கொள்கிறார்கள். அண்மையில் லண்டன் சென்ற ஆலியா பட் தனது மகளை தனியாக விட்டுவிட்டு சென்றார். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என கங்கனா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here