கோத்தா கினாபாலு:
மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் காட்டுத்தீ அபாயம் மற்றும் வறண்டு போய்க் கிடக்கும் ஆறு போன்ற காரணங்களால், அங்கு உடனடியாக மேக விதைப்பு மேற்கொள்ளுமாறு, நட்மாவிடம் சபா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வமாக நட்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளது என்று, சபா மாநிலச் செயலாளர் டத்தோஸ்ரீ சஃபர் உண்டோங் கூறினார்.
“இந்த வாரத்திற்குள் செயற்கை மழை பொழிவிப்பு நிறைவேறும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் நேற்று கூறினார்.
ஆறு வாரங்களுக்கு முன்பு வறண்ட காலநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சபாவின் தவாவிலுள்ள பூலாவ் செபாடிக் நீர் அணை வறண்டு போனததைத் ர்ஹொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் மேக விதைப்பு மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு நம்புவதாக அவர் கூறினார்.