கோலாலம்பூர்:
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் (PLUS) ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்துகொண்டு, சவாரிசெய்த பதின்ம வயது பெண்கள் மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 முதல் 18 வயதுடைய மூவரும் கடந்த புதன்கிழமை (மார்ச் 13) கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வுத்துறை அமலாக்கத்துறை இயக்குநர் டத்தோ முஹமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி சொன்னார்.
குறித்த பெண்கள் குழு பயன்படுத்தப்பட்ட யமஹா Y15ZR வகை மோட்டார் சைக்கிள்களும் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரே மோட்டார் சைக்கிள் குழுவான “AWEK MELAKA” மோட்டார் சைக்கிள் கிளப்பின் உறுப்பினர்களாவர்.
இந்த சாகசம் புரிவதற்கு முன், அவர்கள் சிலாங்கூர், செர்டாங்கிலுள்ள ஒரு உணவகத்தில் இருந்து கொன்வே ஊர்வலமாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் என்று கூறினார்.
குறித்த பெண்கள் அனைவரும் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்தபோது, சூப்பர்மான் ஸ்ரண்ட் போன்ற சாகசங்களை செய்தது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.