அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்ய விடாமல் தடுத்ததோடு பரப்பரப்பை ஏற்படுத்திய இருவர் கைது

வியாழன் இரவு அலோர் ஸ்டாரில் அமலாக்க அதிகாரிகளை தங்கள் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததுடன், பரபரப்பை ஏற்படுத்திய இருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னதாக, சமூக ஊடகங்களில் ஒரு வைரலான காணொளியில்  அலோர் ஸ்டார் நகர சபை (MBAS) அமலாக்க அதிகாரிகளை தவறான வார்த்தைகளைப் பேசுவதையும் தூண்டிவிடுவதையும் காட்டுகிறது.

ஜூலை 2020 முதல் MBAS இப்பகுதியில் வர்த்தகம் செய்வதை தடை செய்துள்ளது. இதில் உணவு அல்லது பானங்கள், பொம்மைகள் மற்றும் கார் பூட் விற்பனை ஆகியவை அடங்கும் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் 33 மற்றும் 42 வயதுடைய வர்த்தகர்கள் என்று கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார். அவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி அரச ஊழியர்களின் கடமைகளைத் தடுக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தின் 353ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். MBAS வர்த்தகர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவுறுத்தியது மற்றும் வர்த்தகம் செய்வதற்கான தடை குறித்த அடையாளங்கள் அப்பகுதியில் முக்கியமாக வைக்கப்பட்டுள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here