உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு நோன்பு திறந்து வருகின்றனர்.
துபாயில் பல்வேறு கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கின்னஸ் சாதனை நிகழ்விலும் பல்வேறு புதுமைகளை துபாய் உலகுக்கு காட்டி வருகிறது.விமான ஓடுபாதையில் இதன் ஒரு பகுதியாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியிலும் இத்தகைய புதுமை படைக்கப்பட்டுள்ளது.உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களை கொண்டு நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.